கமலஹாசனை இயக்கும் அருண்குமார்
‘தக்லைப்’ படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் விக்ரம் நடித்த ‘வீரதீரசூரன் பார்ட்-2’, சித்தார்த் நடித்த ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.கமலை சந்தித்து அருண்குமார் படத்தின் கதையை சொல்லி இருக்கிறார். அந்த கதை கமலுக்கு மிகவும் பிடித்து விட்டதா உடனே நடிக்க சம்மதித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Prev Post
Next Post