ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை என்ற பகுதியில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெறவுள்ளது.
கூட்ட மைதானத்தில் பாதுகாப்புக்காக 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக 40 வாக்கி டாக்கிகள் கொடுக்கப்படும். அனைத்து முதலுதவி வசதியுடன் கூடிய 24 ஆம்புலன்ஸ், 72 மருத்துவர்கள்,120 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.