வரலட்சுமியை பார்த்து பெருமைபடுகிறேன்: ராதிகா
வரலட்சுமி சரத்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘சரஸ்வதி’. இதில் பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் 6-ந் தேதி படம் திரைக்கு வரும் நிலையில் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில்
நடந்தது. விழாவில் சரத்குமார், ராதிகா, சிம்ரன், பிரியாமணி உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் ராதிகா சரத்குமார் பேசியது, வரலட்சுமியை பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வரலட்சுமி முதல் படத்தை பார்த்த போது அவர் நிச்சயமாக ஒரு நல்ல நடிகையாக வருவார் என நினைத்தேன். எங்கள்
நம்பிக்கை உண்மையாகி விட்டது. சரஸ்வதி போன்ற கதையை சொல்ல தைரியம் தேவை. வரலட்சுமி இப்படி ஒரு கதையை சொன்னதை நினைத்து நான் மிகவும்
பெருமைபடுகிறேன் என பேசினார்.
Next Post