திருமண வீட்டில் சோகம்’: நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி!
ஐதராபாத் மொய்னாபாத் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்ற திருமண ‘சங்கீத்’ நிகழ்ச்சியின் போது, சூர்யா பிரகாஷ் சிங் என்ற 10 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்