கோயில் சொத்து முறைகேடு 19 பேர் மீது வழக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை சொத்து முறைகேடு தொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு. ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் வைத்ததாக புகார். முன்னாள் விஏஓ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன் உள்ளிட்ட 19 பேர் மீது மதுரை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.