கிருதிசனோனுடன் மோதலா? ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்
ஷாகித்கபூர்,கிருதிசனோன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘காக்டெயில்-2’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது ராஷ்மிகாவுக்கும்,கிருதி சனோனுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், ‘எனக்கும், கிருதிக்கும் இடையே எந்த பிரச்சினையும் கிடையாது.
படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் எப்போதும் ஒன்றாக தான் இருந்தோம். உணவை ஷேர் செய்து சாப்பிட்டோம். யாரும், யாருக்கும் போட்டி இல்லை என்று நினைப்பவள் நான். ஒரு பெண் மற்றொரு பெண்ணிற்கு ஆதரவாக இருந்தால் அது பெரிய பலமாக இருக்கும் என்றார்.

