மீண்டும் போராட்டம்..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.டெல்லியின் முக்கிய போராட்ட தளமான ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்துள்ளது.
