நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ராணுவத்தில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், இந்திய எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.