நயன்தாராவை மிஞ்சிய ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நீண்ட காலமாக நயன்தாரா முதல் இடத்தில் இருந்து வந்தார். அவர் ஒரு படத்திற்கு ரூ.9 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா அதை முறியடித்துள்ளார். அவர் நடித்துள்ள காக்டெயில்-2 படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளார். ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா-2, சாவா ஆகிய படங்கள் அதிக வசூலை குவித்து முன்னணி ஹீரோயின் என்ற பெயரை அவருக்கு பெற்று வந்துள்ளது. இதனால் இந்த படத்தில் ராஷ்மிகாவுக்கு ரூ15 போடி சம்பளம் கொடுத்துள்ளனர்.
Prev Post