Take a fresh look at your lifestyle.

வத்தலகுண்டு-ல் இறந்த கணவரின் (வழக்கறிஞர்) உடலுடன் 16 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி

61

வத்தலகுண்டு-ல் இறந்த கணவரின் (வழக்கறிஞர்) உடலுடன் 16 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி – துர்நாற்றம் வீசியதால் புகார் – உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திண்டுக்கல், வத்தலகுண்டு காந்திநகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபாண்டி(72) இவரது மனைவி மஞ்சுளாதேவி(66) இந்நிலையில் ஜெயபாண்டி வீடு பூட்டப்பட்டிருந்தது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவு திறக்கப்படாத நிலையில் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஜெயபாண்டி இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அருகில் மனைவி மஞ்சுளாதேவி அமர்ந்திருந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 14-ம் தேதி கணவர் ஜெயபாண்டியன் இருந்து விட்டதாகவும் உறவினர்கள் வரவேண்டும் என்று 16 நாட்களாக காத்திருந்ததாக போலீசாரிடம் மனைவி மஞ்சுளாதேவி தெரிவித்தார். போலீசார் ஜெயபாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்