திருவள்ளூர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய நபர் ஆஜர்.
தமிழகத்தையே உலுக்கிய திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஸ்வகர்மாவை
7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து இன்று மாவட்ட நீதிமன்றத்தில் இந்த குற்றவாளியை புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் உள்ளனர்.