டிஜிட்டல் கதை தளம் கதை ஷார்ட்ஸ் துவக்கம்
விஞ்ஞான வளர்ச்சி உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் ரசிகர்களின் ரசனையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதை கருத்தில் கொண்டு,கதை ஷார்ட்ஸ் எனும் தமிழ் நாட்டின் முதல் ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தி உள்ளார்.இதன் மூலம் அடுத்த தலைமுறைக் கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். இது குறித்து கரண் தயாநிதி மாறன் கூறியது, பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
Prev Post
Next Post