‘ராவடி’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் மற்றும்.எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. சென்னை மற்றும் ஒகேனக்கலில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தைத் அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். இதில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய. ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
Prev Post
Next Post