மீண்டும் ஷூட்டிங்கில் பிசியான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தி யது. ஒரு மாத திருமண கொண்டாட்டத்துக்கு பிறகு இருவரும் படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். ஏற்கனவே இருவரும் நடித்து வந்த ‘ரணபாலி’ படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்றனர். புதுமண தம்பதிக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் கேக் வெட்டி படக் குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Prev Post
Next Post