திருப்பதியில் பயங்கர தீ விபத்து*
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது.
மேலும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க அமைக்கப்பட்ட நிழற்பந்தலும் உடன் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தால் திருப்பதி முழுவதும் பரபரப்பான சூழல்நிலவியது.