பெண்கள் நலனுக்காக பா.விஜய் எழுதிய பாடல்
பெண்கள் மாதவிடாய் காலங்களில் துணிகளை பயன்படுத்தும் சுகாதாரமற்ற முறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை கதை பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ‘பேட்மேன்’ என்ற பெயரில் படமாக வெளியானது.தற்போது, மாதவிடாய் குறித்து மூட நம்பிக்கைகளை தகர்த்து,முழுமையான மாதவிடாய் சுகாதாரம் பேணுதல் குறித்து விழிப்புணர்வை பெண்களிடம் உருவாக்குவதற்காக அருணாச்சலம் முருகானந்தம் எண்ணத்தை பாடலாக கவிஞர் பா. விஜய் எழுதியுள்ளார்.உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்பட உள்ளது.