210 இடங்களில் வெற்றி உறுதி: எடப்பாடி பழனிசாமி
மதுரை என்டிஏ பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
“நமது கூட்டணி 210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் தேனிக்களைப் போல, எறும்புகளைப் போல உழைக்க வேண்டும்.
தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். தமிழகத்திற்கு என்ன நிதி கொடுத்தீர்கள், என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என ஸ்டாலின் சொல்ல முடியுமா?
காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. மத்தியில் அமைச்சர் கிடைத்தாலும் அங்கேயும் ஊழல். ஊழல்களால் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக. அக்கட்சியை அகற்ற தொண்டர்கள் செயல்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”