தக் லைப் படத்தின் புரோமோஷனுக்காக நடிகை திரிஷாவை கே.எஸ்.ரவிக்குமார் நேர்காணல் செய்தார், அப்போது திரிஷா குறித்து அவர் கூறியது, மன்மதன் அம்பு படத்தின் ஷூட்டிங் ஒரு சொகுசு கப்பலில் நடந்தது. அப்போது இரவு 2மணிக்கு மேல் யாருமே இல்லாத நேரத்தில் ‘ஐ அம் தி குயின் ஆப் தி வேர்ல்ட்’ என ஒரு சத்தம் கேட்டது. இந்த நேரத்துல யாருடா கத்துறது என யோசித்துக் கொண்டு நான் சென்று பார்த்த போது திரிஷா மட்டும் தனியாக நின்று கொண்டு கடலின் அழகை ரசித்தபடி
அவருடைய ஆசையை வெளிப்படுத்தினார். அந்த பீலிங்கை நான் கெடுக்க விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். என்று இந்த பேட்டியின் போது சொல்லி திரிஷாவுக்கு என்ப அதிர்ச்சி கொடுத்தார்.