துல்கர் சல்மானின் 41 வது பட ஷூட்டிங் துவக்கம்

துல்கர் சல்மானின் 41 வது பட ஷூட்டிங் துவக்கம்
தென்னிந்திய அளவில் பிசியான நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் தற்போது தமிழில் காந்தா படத்திலும்,மலையாளத்தில் ஐயம் கேம் படத்திலும், தெலுங்கில் ஆகாசம்லோ ஒக தாரா படத்திலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில், துல்கர் தனது 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவி நெலகுதிதி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. நடிகர் நானி கிளாப் அடித்து ஷூட்டிங்கை துவங்கி வைத்தார்.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Comments (0)
Add Comment