மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜையை

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. ஆர். கோபாலகிருஷ்ணன் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment