‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’துவக்கம்
கடலூரை சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக் முரளி, தனது இளம் வயது சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் புதிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் நல்ல திறமையானவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் நல்ல கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க உறுதி எடுத்துள்ளார். அவரின் 30வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.