மேக்கப் இல்லாமலே சாய் பல்லவி இவ்வளவு அழகா…!

மேக்கப் இல்லாமலே சாய் பல்லவி இவ்வளவு அழகா…!
தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ள சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் பான் இந்தியா படமான ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. படத்தில் பெரும்பாலும் மேக் அப் இல்லாமலே நடிப்பதாக அதில் கூறியிருக்கிறார். தனது முதல் படத்தில் இருந்தே மேக் அப் போடாமலேயே நடித்து வருவதாகவும் அதிகபட்சமாக ஐ லைனர் மட்டுமே பயன்படுத்தியுள்ளேன் என்றும் அவர் அதில் கூறி இருந்தார்.

சாய் பல்லவி அளித்த பேட்டி மீண்டும் வைரல் ஆகி வரும் நிலையில், அழகுக்கு எதற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று இணையத்தில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Comments (0)
Add Comment