நித்யா மேனனின் புதிய அவதாரம்

நித்யா மேனனின் புதிய அவதாரம்
மலையாள மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் கேயூரி புரடக்ஷன்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை
நித்யாமேனன் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு திரைப்படங்களை உருவாக்குவது அதிகம் பிடிக்கும். அறிவைவிட ஆழமான இடம். சிந்தனை க்கும்,பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இடம் தான்.நான் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே அது எனது நோக்கமாகவும் இருந்தது. இப்போது நான் படங்களை தயாரிக்கும் போது அந்த நோக்கத்தை வைத்தே நான் உங்களுக்கு வழங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment