பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கயாடு லோஹர்

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கயாடு லோஹர்
பிரதீப் ரங்​க​நாதன் நடித்த ‘டி​ராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறி​முக​மானவர் நடிகை கயாடு லோஹர். தற்போது இதயம் முரளி, மஞ்​சணத்​தி, இம்​மோர்​டல் உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார். நேற்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அறிமுக இயக்குநர் மரியப்பா சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் அவர் இணைந்து நடித்துள்ள இம்மார்டல் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கி உள்ள இரண்டாம் வானம் படத்திலிருந்து புதிய போஸ்டரை வெளியிட்டு பட குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சமூக ஊடகங்​களில் இருந்து சில காலம் விலகி இருக்​கப் போவ​தாக கயாடு அறிவித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள இன்​ஸ்டா பதி​வில், “சமூக ஊடகங்​களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்​கப் போகிறேன். சில நேரங்​களில், நம் உடலுக்​குக் கொடுக்​கும் அதே வகை​யான ஓய்வு மனதுக்​கும் தேவைப்​படு​கிறது. அதனால் சில காலம் திரைக்கு அப்​பாற்​பட்ட வாழ்க்​கை​யுடன் அதிக நேரம் செல​விட விரும்​பு​கிறேன். எனக்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

Comments (0)
Add Comment