அட்லிக்கு நன்றியுடன் இருப்பேன்: சாய் அபயங்கர்
திங்க் மியூசிக் தயாரிப்பில்,சாய் அபயங்கர் இசையமைத்துள்ள ‘பவழ மல்லி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், கருப்பு படம் ஏப்ரல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தனுசின் டி55 படத்திற்கான
முன்னேற்பாடு பணிகள் நடைபெபற்று வருகின்றன.அல்லு அர்ஜூன், அட்லீதிரைப்படத்திற்கும் நான் இசையமைக்கி றேன்.அட்லீ அண்ணா, என்னை முதலில்சந்தித்தபோது, எனது ஒரு தனிப்பாடல் இசையை காட்டினேன். அதைக் கேட்டவுடன் அவர் தனது அடுத்த படத்திற்கு இசை அமைக்க விருப்பமா என்று கேட்டார்.அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றி உடையவனாக இருப்பேன். நான் தொடர்ந்து என் கடின உழைப்பை கொடுத்து சிறந்த இசையை வழங்க ஆசைப்படுகிறேன் என்றார்.