மகளிர் மட்டும் எப்டிஎப்எஸ்
ரஜினியின் கூலி படம் நேற்று முழுவதும் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை ( எப்டிஎப்எஸ்) பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அதேபோல் பெண்களும் அதிக அளவில் படம் பார்க்க விரும்பியதால் திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் மகளிர் மட்டும் எப்டிஎப்எஸ் நேற்று திரையிடப்பட்டது. 600 பெண்களுடன் அரங்கு நிறைந்த காட்சியாக இருந்தது. மோனிகா பாடலுக்கு ஆட்டம் ஆடி பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.