கடல் கன்னியாக கலக்கும் ஆண்ட்ரியா

கடல் கன்னியாக கலக்கும் ஆண்ட்ரியா
இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் கடல் கன்னி. இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது. இதுகுறித்து இயக்குனர் தினேஷ் செல்வராஜ் கூறியது,கொல்கத்தா ஜெய்ப்பூர் கோவா என பல்வேறு மாநிலங்களில் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண்ட்ரியாவின் அர்ப்பணிப்பான நடிப்புதான். தினமும் 5 மணி நேரம் தண்ணீருக்குள் கஷ்டப்பட்டு நடித்தார். உண்மையிலேயே அவர் ஒரு கடல் கன்னி போல் மாறிவிட்டார் என்றார்.

Comments (0)
Add Comment