தூக்கத்தை தொலைத்த திரிஷா
சமீபகாலமாக சினிமா செய்திகளை விட சர்ச்சையான செய்திகளில் அடிக்கடி சிக்கி வருகிறார் நடிகை திரிஷா.அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மணி நேரத்திற்கு தூக்கத்தை இழந்தால் அதனை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும். அப்படி கணக்கு பார்த்தால் 2062-ல் தான் நான் நன்றாக உறங்குவேன் என்று பதிவிட்டுள்ளார்.அவரது பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு திரிஷாவின் பதிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக வும்,தூக்கமில்லாமல் தவிப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.