என்னை பணம் கொடுத்து ட்ரோல் பண்றாங்க: பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மேட் இன் கொரியா. இந்த படம் நாளை 13ம் தேதி முதல் நெட் பிலிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து என்னை ட்ரோல் பண்றாங்க என்று நேர்காணல் ஒன்றில் நடிகை பிரியங்கா மோகன் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது, என்னைப் பற்றிய சில ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள் இயல்பாக உருவாகும் விஷயங்கள் அல்ல.சிலர் திட்டமிட்டு பணம் கொடுத்து என்னை எதிர்த்து பதிவுகளை வெளியிடச் செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது
ஆனாலும் சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்களை சமாளிக்க கற்றுக்கொண் டேன். அவற்றை பெரிதாக எடுத்துக்கொள் ளாமல் எனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.