‘அனிஷ்மா அனில் நடிக்கும் மொத ராத்திரி’ ஷூட்டிங் ஓவர்

‘அனிஷ்மா அனில் நடிக்கும் மொத ராத்திரி’ ஷூட்டிங் ஓவர்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில் குமார் வீடு ரோலில் நடித்துள்ள படம் ‘மொத ராத்திரி’. அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ‌நிறைவடைந்துள்ளது. இது குறித்து இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறியது, எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” என்றார்.

Comments (0)
Add Comment