“நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு”- முதல்வர் விஜய்.
நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தவெகவின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்ய பொய் வாக்குறுதிகளை அளிக்கமாட்டோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது மட்டுமே நீட் ஒழிப்புக்கு ஒரே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்-முதலமைச்சர். அதில் சட்ட சிக்கல் இருந்தால் இடைக்காலத் தீர்வு உருவாக்கி மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். நீட் தேர்வு அகற்றப்படுவதே இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு என்பதை வலியுறுத்துகிறோம்-முதல்வர் விஜய்.